சீன மருத்துவமனையொன்றில் தீ விபத்து!!

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்.


அன்ஹூய் மாகாணத்தில் உள்ள போசோவ் நகரின் குயாங் கவுண்டியில் உள்ளடவுன்ஷிப் சுகாதார மையத்தில் அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவலறிந்து, அங்கு சென்ற தீயணைப்பு படையினர் தீவிரமாக போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். பின்னர் மீட்பு பணிகளையும் மேற்கொண்டனர்.

இதன்படி, 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த தீ விபத்து சீன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.