ஸ்ரீஇராமனாக காட்சி அளித்த மகான் சாய்பாபா!!

“மண்மாடு” என்னும் ஊரில் கிறிஸ்துவர் ஒருவர் இருந்தார். அவரைக் காண நண்பர் ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார்.

அவர்  தென் ஆப்பிரிக்காவி்ல் புகழ்பெற்ற டாக்டராக இருந்தவர். அவரை அவருடைய நண்பர்,  “சீரடியில்”  உள்ள மகான் சாய்பாபாவை  தரிசித்து வரலாம் என்று உடன் அழைத்தார்.

அந்த டாக்டர் தீவிரமான “ ராமபக்தர்”.  ஆதலால், "நான் ராமனைத்தவிர எந்த தெய்வத்தையும் தரிசிப்பதில்லை. என்னால் சாய்பாபா தரிசிக்க வர இயலாது" என்று மறுத்தார்.
அந்த  நண்பர்  விடவில்லை. " எனக்காக தாங்கள் கட்டாயம் வரவேண்டும். என் காரிலேயே போகலாம். அங்கு உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால் காரிலேயே உட்கார்ந்திருங்கள். நான் மட்டும் மசூதியில் சென்று சாய்பாபாவை தரிசித்து விட்டு வந்துவிடுகிறேன். வழித்துணையாக மட்டும் என்னுடன் வந்தால்வபோதும்" என்றார். டாக்டரும் ஒப்புக்கொண்டு நண்பரின் காரிலேயே “சீரடி” வந்தார்.
“சீரடி மசூதி வாயிலில்” கார் வந்தவுடன் டாக்டரை  காரில்உட்கார வைத்து விட்டு அந்த நண்பர் மட்டும் சாய்பாபாவை தரிசிக்க மசூதி சென்றார்.
காரில் அமர்திருந்த டாக்டர் அங்கிருந்தவாறே மசூதியில் அமர்ந்திருந்த சாய்பாபாவை பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்து கொண்டிருந்த டாக்டருக்கு சாய்பாபா அங்கு இல்லாமல் அந்த இருக்கையில் ஸ்ரீஇராமன் காட்சி அளிப்பதை போல தெரிந்தது.

சாய்பாபா உறையும் இடத்தில் ஸ்ரீஇராமபிரான் எப்படி காட்சியளிக்க முடியும்? கண்கள் கசக்கிக்கொண்டு மீண்டும் உற்று நோக்கினார் டாக்டர்.
இப்போதும் இதே இராமபிரான்தான் காட்சி அளித்தார். இக்காட்சியினை கண்ட டாக்டர், காரிலிருந்து இறங்கி நேராக ஓடிவந்து,
இராமபிரான் (சாய்பாபாவின்) காலடியில் விழுந்து வணங்கினார். அவருடைய நண்பருக்கும் ஒன்றும் புரியவில்லை, டாக்டர் உற்று நோக்கினார்.
டாக்டர், "சாய்யே - இராமன், இராமனே - சாய்" என ஆனந்தக் கூத்தாடத் தொடங்கினார்.

மகானின் மாபெரும் சக்தியை என்னென்பது?
“மேகாவுக்கு”  “சிவனாக” காட்சி அளித்த சாய்பாபா,  “ரேகேவுக்கு”  “கிருஷ்ணனாக” காட்சி அளித்த சாய்பாபா,  இராமனை தவிர வேறு தெய்வத்தையே வணங்காத டாக்டருக்கு - ஸ்ரீஇராமனாக் காட்சி அளித்தார் என்றால் சாய்பாபாவின் பேரருளை அளவிட்டுக் கூறத்தான் முடியுமா?
                                                           

ஓம் ஸ்ரீ சாய்ராம். 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.