சஜித் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் தனித்தனியே பேச்சு!

நாட்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற முடிவிற்கு இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவில்லை.


கடந்த தேர்தலில் போலல்லாமல் இம்முறை, ராஜபக்ச தரப்பில் அதிருப்தியும், கோபமும் இல்லையாயினும், அந்த தரப்புடன் எந்த சமரசமும் கூட்டமைப்பிற்கு இதுவரை ஏற்படவில்லை.

எனினும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களின் முடிவு என்னவாக இருக்குமென்பது ஊகிக்கக் கூடியதுதான்.

இந்த நிலையில் , தமிழ் தேசிய கூட்டமைப்பு போவதற்கு வேறு இடமில்லையென்ற நினைப்பில் , ஐ.தே.க தரப்பு இருப்பதாக சிலர் கூறிவருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை எந்த தீமானத்தையும் தெரிவிக்காத காரணத்தால் சஜித் பிரேமதாச ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

அந்தவகையில் சஜித் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒவ்வொரு எம்.பிக்களிற்கும் தனித்தனியே தொலைபேசியில் அழைத்து உரையாடி வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனேகமாக கூட்டமைப்பின் எம்.பிக்கள் சொல்லி வைத்ததைபோல, கட்சி எடுக்கும் முடிவுதானே நமது முடிவு என தெரிவித்தாலும், அவர்களின் ஆதரவை பெறுவதற்காகவே சஜித் தனித்தனியே உரையாடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எப்படி இருப்பினும் விரவில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்பது தெரியவ்ந்துவிடும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.