தீபாவளி என்றால் என்ன? 

1. ஒரு காலத்தில் ஓர் அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக்கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்துகொண்டான்.


2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் விரித்தார்.

3. விரித்த உலகம் அப்பன்றியுடன் கலவிசெய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி பூமியுடன் கலவிசெய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசுரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசுரனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்லமுடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசுரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
இந்த விஷயங்கள் தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்னவென்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதையை எழுதிய ஆரியர்க்கு பூமி நூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருதவேண்டியிருக்கிறது?

1. பூமி தட்டையா? உருண்டையா? (பாயாகச் சுருட்ட)

2. தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்டமுடியுமா?

3. எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?

4. கடலில் ஒளிந்துகொள்வதாயின் கடல் அப்போது எங்கு இருந்திருக்கும்?

5. விஷ்ணு, மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?

6. அரக்கனைக் கொன்று பூமியை விரித்தால் பூமிக்குப் பன்றியின்மீது காதல் வருமா?

7. பூமி மனித உருவமா? மிருக உருவமா?

8. மனித/மிருக உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

9. பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
இவைகளை கொஞ்சம் கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா??

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.