அம்பாறையில் பொலிஸார் குவிக்கப்பட்டதால் பதற்றம்!!

அம்பாறை மாவட்டத்தில் அரச சாா்பற்ற நிறுவனம் ஒன்று காணிகள் சம்மந்தமாக நடாத்திய நிகழ்வுக்கு எதிராக மக்கள் கூடியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


மனித உயர்வு மையம் என்கிற அமைப்பினால் நிகழ்வொன்று இன்று காலை நடத்தப்பட்டது.

இதன்போது காணி அபகரிப்பு, இருப்புக்களை கையகப்படுத்துவதை தடுத்தல் போன்ற விடயங்கள் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது.

எனினும் தேர்தல் காலம் என்பதால் இப்படியான நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அறிவிப்பு தெரிவத்தாட்சி அதிகார அலுவலகத்திடம் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை அல் சக்கி மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது மண்டபம் முன்னால் திரண்ட மக்கள் இந்த நிகழ்வை நடத்தவிடாமல் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.