திருகோணமலை- சேருவல பகுதியில் நிலத்தடியில் தங்கம்!

திருகோணமலை- சேருநுவர பகுதியில் இரும்பு மற்றும் செம்பு கனிமங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கு ம் இடத்தில் தங்கம் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக புவி சாிதவியல் சுரங்கங்கள் பணியக தலை வா் அசேல இத்தவல கூறியுள்ளாா்.


கம்பஹா பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தங்க வளம் இருக்கும் இடத்திற்கு புதிய பொருளாதார பெறுமதியை ஏற்படுத்த தனியார் முதலீட்டாளர்களின் உதவியை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளோம்.

இலங்கையில் தங்கம் இருப்பதை உறுதிப்படுத்த முடியும். சேருவில பிரதேசத்தை சூழ இருக்கும் 100 கிலோ மீற்றர் சுற்று வட்டத்தில் சுமார் 5 கிலோ மீற்றர் பரப்பளவில் தங்கம் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் அசேல இத்தவல குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.