‘பெண்குயின்’ ஆக மாறிய கீர்த்தி!

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு பெண்குயின் என தலைப்பிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் மேயாத மான், மெர்குரி படங்களைத் தொடர்ந்து மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்குப் பின் கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிக்கும் படமிது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கவுள்ளார். எமோஷனல்-மிஸ்டரி-திரில்லர் கலந்த திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளான இன்று(அக்டோபர் 16), இப்படத்தின் தலைப்பையும் டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு. இப்படத்திற்கு பெண்குயின் என தலைப்பிடப்பட்டிருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியாக கீர்த்தி சுரேஷ் உருவம் இருளில் இருப்பது போன்ற படத்தின் போஸ்டர், ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் படத்திற்கு, அனில் க்ரிஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.