யாழ்ப்பாணத்திற்கு சேவை வழங்க முன்வரும் விமான நிறுவனங்கள்!!

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணம்- சென்னை இடையே விமானங்களை சேவையில் ஈடுபடுத்த மேலும் பல நிறுவனங்கள் முன்வரும் என தெரிவிக்கப்பப்பட்டுள்ளது.


அந்தவகையில் யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையில், விமான சேவைகளை நடத்துவதற்கு மேலும் பல நிறுவனங்கள் முன்வரும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் இதனை  குறிப்பிட்டுள்ளார்.

யாழ் சர்வதேச விமான  நிலையம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில், விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் நாளாந்த விமான சேவைகளை நடத்த அலையன்ஸ் ஏயார் நிறுவனம் முன்வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொள்வதற்கு, 50 நிமிடம் தொடக்கம் 1 மணித்தியாலமே தேவைப்படும்.

இதேவேளை, விமான செயற்பாட்டில் அபிவிருத்தியில் சந்தைப் பங்கை கைப்பற்றிக்கொள்ளல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று சர்வதேச விமான நிலையமொன்றாக செயற்படுதல், மற்றும் இலங்கைக்கு பொருளாதார மற்றும் முதலீட்டு சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதற்கு வசதிகளை வழங்கும் வழியொன்றாக இவையமைந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.