சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 13 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த 13 பேர் சிலாபம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சிலாபம், சுதுவெல்ல பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து குறித்த நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான ஆயத்தங்களை அவர்கள் மேற்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், பலாலி, மாங்குளம் மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது தொடக்கம் 44 வயதுடையவர்கள் என்றும், அவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைதுசெய்யப்பட்டவர்கள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.