சாய்ந்தமருதில் பொலிஸார் குவிப்பு!!

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளுகின்ற சாய்ந்தமருது கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வெளிஇடங்களில் இருந்து குவிக்கப்பட்டுள்ளனர்.


இன்று 3 பேருந்துகளில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த சுமார் 150க்கும் அதிகமான பொலிஸார் மகிந்தவின் பாதுகாப்பிற்காக வருகை தந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

மகிந்த கலந்துகொள்கின்ற குறித்த கூட்டம் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவாக , முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் நடக்குமிடத்திலிருந்து இரண்டு யுவதிகள் கைதானதை தொடர்ந்தே, உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட ஒழுங்கு முறைகளை ஆராயும் முகமாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எல்.ஏ சூரியபண்டார தமைமையில் விசேட ஒழுங்குமுறையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை சாய்ந்தமருது பிரதேச சபையை வலியுறுத்தி ,கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரிக்க சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபை மற்றும் சுயேட்சை குழுவினர் முடிவு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.