சர்வதேச ஆசிரியர் தினம் தமிழாலயம் பேர்லின்!📷

சர்வதேச ஆசிரியர் தினம் (05.10.)இன்றாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் சர்வதேச ஆசிரியர் தினத்தைப் பிரகடனம் செய்துள்ளது.

ஆசிரியர்கள் மாணவர்களிடையே என்றும் இணக்க சூழலை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான் , ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது காட்டும் உன்னதமான கண்காணிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்க செய்கிறது .
ஆசிரியர்கள் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது . படித்து பட்டம் பெற்றவனுக்கும் , படிக்காமல் பட்டறவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள்தான் . ஆசிரியருக்கு மட்டும் என்றும் அந்த தனித்தன்மையுண்டு . உலகில் உள்ள பெரிய மனிதர்களாக இருக்கட்டும் சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இரு தரப்பிற்கும் வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார் .
அந்தவகையில் பேர்லின் தமிழாலய ஆசிரியர்களுக்கு நிர்வாகத்தின், பெற்றோர்களின் சார்பில் மாணவர்களால் மலர் வழங்கி நன்றி கூறப்பட்டது.புலம்பெயர் தேசத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் ஊட்டி கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்.

தமிழாலயம் பேர்லின்
நிர்வாகம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.