பருப்பு கறி தாயாரிப்பது எப்படி??

தேவைப்படும் பொருட்கள் (4 - 5 பேருக்கு) :

மைசூர் பருப்பு கோப்பை - 1

வெங்காயம் (மெல்லியதாக நறுக்கியது) - 1

வெள்ளைப் பூடு (இரண்டாக பிளந்து) - பீர்க் 4

பச்சை மிளகாய் (பெரிய துண்டாக வெட்டியது) – 2

கருவேப்பிலை - இலை 5

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி

தேங்காய் பால் (இரண்டாவது தடவை) - 1 கோப்பை

தேங்காய் பால் (முதலாவது தடவை) - 2 கோப்பை

உப்பு தேவையான அளவூ
 

தாளிப்பதற்காக

வெங்காயம் -1/2 காய் (மெல்லியதாக நறுக்கியது)

துண்டு மிளகாய் - 1 தேக்கரண்டி

வெள்ளைப் பூடு (அளவாக வெட்டியது) - பீர்க் 1

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
 

தயாரிக்கும் முறை

முதலில் பருப்பை நன்றாக கழுவி பாத்திரத்தில் இட்டு அதற்கு வெங்காயம் பச்சை மிளகாய்இ வெள்ளைப் பூடுஇ கருவேப்பிலைஇ மஞ்சள் தூள்இ மிளகாய் தூள் மற்றும் தேங்காய் பால் (இரண்டாவது பால்) சேர்த்து அடுப்பில் வைத்து பருப்பு விதை அவியூம் வரை வேகவிடவூம்.


அதன்பின் அதற்கு தேங்காய் பால் (முதலாவது பால்) சேர்த்து கொதிக்க வைத்து அதற்கு அஜினமொட்டோ மற்றும் உப்பு தேவையான அளவூ சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவூம்.


இப்போது தாளிப்பதற்காக தாச்சியில் எண்ணெய் இட்டு சூடாக்கியதும் அதற்கு வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூடு சேர்த்து பொரித்து வரும்போது துண்டு மிளகாயையூம் போட்டு உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கி இந்த தாளிப்பை ஏற்கனவே சமைத்து வைத்த பருப்பு கறியில் கலந்து பறிமாறவூம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.