பொது மேடைப் பேச்சு கோட்டாவுக்கு வராது!

பொது மேடைகளில் தனது கருத்துக்களை சுயமாகக் கூற முடியாதமையினாலேயே ‘மார்ச் 12‘ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மக்கள் மேடை’ நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை. அவருக்குத் துணிவிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.” என தெரிவித்தார் அமைச்சர் அஜித் பி பெரேரா.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது “ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலத்திரனியல் திரையின்றி மேடைகளில் பேசத் தெரியாது.

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் நாட்டுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில்கூட அவரால் சுயமாகப் பேச முடியாது.

தன்னுடைய கொள்கைககளைப் பிறிதொருவர் தயாரித்துக் கொடுத்து அவற்றைப் பார்த்து வாசிக்கும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகுவதற்குத் தகுதியானவரா என்பதே எமது கேள்வியாகும்” – என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.