ரோஹித போகொல்லாகம சஜித்துக்கு ஆதரவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசிய கட்சியும் தங்களுக்கான ஆதரவை திரட்டும் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பெரும்பாலான கட்சிகளின் உறுப்பினர்கள், தாங்கள் ஆதரவு வழங்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும் மேல் மாகாண ஆளுநருமான ஏ.ஜே.எம்.முசம்மில் ஆகியோர் கோட்டாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இன்று அறிவித்துள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிம் கோட்டாவுக்கே ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையிலேயே சஜித்துக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதாக ரோஹித போகொல்லாகம கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.