நானாகிய என் மாற்றம்......!! கவிதை!!
இப்போது நான் அளவோடு இருக்கிறேன்...
எவற்றுக்காகவும் காத்திருப்பதில்லை.
அதுவாக கிடைத்தால் மட்டுமே பெற்றுக் கொள்கிறேன்...
தொலைபேசியில் மின்சக்தி முடிவதற்கு முன்னரே தூங்குவதற்குச் செல்கிறேன்..
சேவலுக்கு முன்னரே விழித்துக்கொள்கிறேன்...
சாமி கும்பிடுவதில்லை ஆனால் பிரசாதத்தில் பிரியமாய் இருக்கிறேன்..
குறைவாகப் பேசுகிறேன் அதிகமாக மௌனமாய் இருக்கிறேன்....
எல்லோருக்கும் என்னை எளிதில் பிடித்துவிடுகிறது என்பதால் வெறுக்கவும் பழகிவிட்டேன்..
யாருக்கும் அறிவுரை கூறுவதில்லை முட்டாளாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன்...
பூக்களை இரசிக்கவோ மழையில் நனையவோ ஒதுக்கும் நேரத்தில் மரங்கள் நடுவதற்கு நினைத்துள்ளேன்.
எதிரே எவர் வந்தாலும் முகத்தைப் பணித்துக் கொண்டு பயணிக்கிறேன்..
தனிமையின்போது எதையும் நினைப்பதில்லை.. எதையும் நினைக்காமல் இருப்பதால்தான் எனக்குத் தனிமையும் கிடைக்கவில்லை...
எல்லா ஆடவரைப் போலும் இல்லாமல் சூரியன் மறைவதற்கு முன்பே வீட்டுக்குப் போய்விடுகிறேன்...
சாப்பிடும்போது விக்கல் எடுத்தாலோ காரம் அதிகம் என்றாலோ தண்ணீர் எடுக்க மற்றவரை ஏவாமல் நானே செல்கிறேன்...
ஆமாம் நான் அளவோடு இருப்பதனால்தான் இப்போது ஆறதலாகவும் இருக்க முடிகிறது...
த. யசுதன்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
எவற்றுக்காகவும் காத்திருப்பதில்லை.
அதுவாக கிடைத்தால் மட்டுமே பெற்றுக் கொள்கிறேன்...
தொலைபேசியில் மின்சக்தி முடிவதற்கு முன்னரே தூங்குவதற்குச் செல்கிறேன்..
சேவலுக்கு முன்னரே விழித்துக்கொள்கிறேன்...
சாமி கும்பிடுவதில்லை ஆனால் பிரசாதத்தில் பிரியமாய் இருக்கிறேன்..
குறைவாகப் பேசுகிறேன் அதிகமாக மௌனமாய் இருக்கிறேன்....
எல்லோருக்கும் என்னை எளிதில் பிடித்துவிடுகிறது என்பதால் வெறுக்கவும் பழகிவிட்டேன்..
யாருக்கும் அறிவுரை கூறுவதில்லை முட்டாளாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன்...
பூக்களை இரசிக்கவோ மழையில் நனையவோ ஒதுக்கும் நேரத்தில் மரங்கள் நடுவதற்கு நினைத்துள்ளேன்.
எதிரே எவர் வந்தாலும் முகத்தைப் பணித்துக் கொண்டு பயணிக்கிறேன்..
தனிமையின்போது எதையும் நினைப்பதில்லை.. எதையும் நினைக்காமல் இருப்பதால்தான் எனக்குத் தனிமையும் கிடைக்கவில்லை...
எல்லா ஆடவரைப் போலும் இல்லாமல் சூரியன் மறைவதற்கு முன்பே வீட்டுக்குப் போய்விடுகிறேன்...
சாப்பிடும்போது விக்கல் எடுத்தாலோ காரம் அதிகம் என்றாலோ தண்ணீர் எடுக்க மற்றவரை ஏவாமல் நானே செல்கிறேன்...
ஆமாம் நான் அளவோடு இருப்பதனால்தான் இப்போது ஆறதலாகவும் இருக்க முடிகிறது...
த. யசுதன்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை