வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற இருவர் மீது விசாரணை!!

பிராம்ப்டனில் கடந்த மாதம் மூன்று இளைஞர்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற இருவரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் 18 வயது இளைஞனையும், வயதுக்குட்பட்ட சந்தேக நபரையும் கைது செய்த பொலிஸார், பிராம்ப்டன் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட போதும், அவர்கள் மீதான விசாரணைகள் தொடருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஜோடி மீது கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் சம்பவ இடத்தில் இருக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார், மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி எல்ஜின் டிரைவ் மற்றும் மெக்லாலின் வீதிப் பகுதியில் உள்ள நடைபாதையில் சென்றுக் கொண்டிருந்த மூன்று பாதசாரிகள் மீது, ஒரு வெள்ளை ஹோண்டா பைலட் எஸ்யூவி ரக வாகனம் மோதியது.

இதில் பிராம்ப்டனைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இருவர், உயிருக்கு ஆபத்தான காயங்களுடனும் மற்றொரு 17 வயதுடையவர் காயங்களுடனும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், மெக்லாலின் வீதி வடக்கு நோக்கி தப்பிச்சென்ற வாகனத்தை செலுத்திய இருவரே தற்போது, கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.