கடல்மார்க்கமாக பிரான்ஸ் செல்ல முயன்றவர்கள் கைது!

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் நோக்கிப் பயணிக்க முயற்சித்த ஆறு பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சிலாபம் கடற்பரப்பில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமையவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

28 – 32 வயதிற்கு இடைப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.