சரணடைந்த ஆவா குழுவின் முக்கிய ரௌடி!!

யாழ்ப்பாணத்தில் பொலிசாரால் 2 வருடங்களிற்கு மேலாக வலைவீசி தேடப்பட்டு வந்த பிரபல வாள்வெட்டு சந்தேகநபர் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


வாள்வெட்டு, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த இணுவிலைச் சேர்ந்த குமரேசரத்தினம் வினோதன் என்ற இந்த இளைஞன், தனது சட்டத்தரணி ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார்.

ஆவா ரௌடிக்குழுவின் முக்கிய நபர் இவர் என பொலிசார் குறிப்பிட்டு வந்தனர். இதனால், இவரை “ஆவா” எனவும் குறிப்பிடப்பட்டு வந்தது.

அச்சுவேலி பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வன்முறை சம்பவம் ஒன்றின் வழக்கில் சந்தேகநபராக அவர் இன்று சரணடைந்தார்.

சந்தேகநபரை வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.