மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!

மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பத்மபிரிய திசேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாகவே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பத்மபிரிய திசேரா கூறியுள்ளார்.

இதேவேளை, தாழமுக்கம் காரணமாக வடக்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனோடு இணைந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலநிலை தொடரும் பட்சத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.