மனைவி தாக்கி கணவன் மரணம்!!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் மனைவி பொல்லால் தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு, வாழைச்சேனை, கண்ணகிபுரத்திலேயே குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

நீண்டநாள் குடும்பத் தகராறே குறித்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து மனைவி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் வாழைச்சேனை கண்ணகிபுரம் 3 ஆம் குறுக்கைச் சேர்ந்த 36 வயதுடைய மாரிமுத்து சுரேஷ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.