அதிகாரி ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் 200,000 கையூட்டு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான நபர் ஒருவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்ட அறிக்கையை மாற்றி சமர்ப்பிப்பதற்காக இலஞ்சம் வாங்கிய அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்றையதினம் கடுவெல நீதிவான் நிதிமன்ற வளாகத்திற்குள் வைத்து குறித்த அதிகாரி இலஞ்சம் வாங்கியபோது கையும் மெய்யுமாக சிக்கினார்.

போதைப்பொருளுடன் கைதானவரின் அறிக்கையை மாற்றி, அவரிடமிருந்து கஞ்சாவே கைப்பற்றப்பட்டது என குறிப்பிட கலால் திணைக்களத்தை சேர்ந்த குறித்த அதிகாரி 200,000 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகின்றது .

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த அதிகாரி பத்தரமுல்லவில் உள்ள கலால் துறை அலுவலகத்தில் பணியாற்றுபவர் என தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.