வாக்குரிமை எமது வாழ்வுரிமை – இந்து குருமார் அமைப்பு!!

ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது உரிமையை செம்மையாக பயன்படுத்த வேண்டும் என இந்து குருமார் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.


இது தொடர்பான இந்து குருமார் ஒன்றியம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவிக்கையில்,  “அன்பார்ந்த தமிழ் மக்களே, எம் அனைவருக்கும் வாக்குரிமை என்பது எமது வாழ்வுரிமையாகும். இதனை நாம் எமது சமுதாய கடமையாக எண்ணி செயற்பட வேண்டும்.

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் எமது உரிமையை செம்மையாக பயன்படுத்த வேண்டும்.

எமதும், சமுதாயத்தினதும் உரிமை கருதி, செல்லுபடியாகக் கூடிய வண்ணம் எமது வாழ்வுரிமையை தவறாது பயன்படுத்தி பயன்பெறவேண்டும் என இந்துக் குருமார் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.