5 இலட்சம் பேர் காற்று மாசினால் பாதிப்பு!

இந்தியாவில் காற்று மாசு காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 5 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.


லொன்செட் என்ற அமைப்பினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 97 ஆயிரம் பேர் நிலக்கரி புகை காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி முறையை கைவிடாவிட்டால் காற்று மாசு காரணமாக இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கும் எனவும் இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் டெல்லியை அச்சுறுத்தி வரும் காற்று மாசு, தற்போது சென்னையையும் கடுமையாக அச்சுறுத்தி வருகின்றது.

கடந்த வாரம் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 230 ஆக காணப்பட்ட நிலையில், சென்னையில் காற்று மாசு 256 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.