அதிசயமாக தலையின் நடுவில் வாலுள்ள நாய்க்குட்டி!!

10 வார வயதுடைய தலையின் நடுவில் வாலுடைய நாய்க்குட்டி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மிசோரியில் உள்ள விலங்கு மீட்பு மையத்தால் மீட்கப்பட்டுள்ளது.


சிறப்புத் தேவைகளைக் கொண்ட விலங்குகளைப் பராமரிக்கும் அந்த அமைப்பின் பணியாளர்கள் நாய்க்குட்டியை நார்வல் (Narwhal) என்று பெயர் சூட்டி அழைத்தனர்.

தலையில் இருக்கும் அந்த வால் நாய்க்குட்டிக்கு எந்த வலியையும் ஏற்படுத்தாததால் அதனை அகற்றத் தேவை இல்லை என்று கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் நாய்க்குட்டியை நார்வலின் படங்கள் வெளியாகி குறித்த மீட்பு மையத்தின் பணிகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவியுள்ளது.

நார்வல் என்பது ஆர்க்டிக் கடலில் வாழும் ஒருவகை திமிங்கலமாகவும். அதன் தலையில் முன்புறம் தண்டு போன்ற நீண்ட உறுப்பு இருக்கும் அதனால் நாய்க்குட்டிக்கு நார்வல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.