மகிழுந்து தீப்பற்றி எரிந்தது!!

பொறளை – மொடுல்பாம் சந்தியில் நேற்றைய தினம் மகிழுர்ந்து ஒன்று தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளது.


நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீதியில் அந்த மகிழுர்ந்து பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தத் தீhப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மகிழுர்ந்தின் சாரதி அதனை வீதியோரத்தில் நிறுத்தியுள்ளார்.

பின்னர் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் செல்வதற்கு முன்னதாக மகிழுர்ந்து தீயில் சேதமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.