நேபாளத்தில் விசேட க.பொ.த பரீட்சை நிலையம் ஒழுங்கமைப்பு!

நாட்டில் எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை முன்னிட்டு நேபாளத்தின் காத்மண்டு நகரில் விசேட பரீட்சை நிலையமொன்றை அமைப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.


இந்த வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் 07 பேர், நேபாளத்தின் காத்மண்டு நகரில் இடம்பெறும் தெற்கு ஆசியா விளையாட்டு விழாவில் கலந்து கொள்கின்ரனர்.

இதன் காரணமாக அங்கு பரீட்சை நிலையம் அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்காக நாட்டில் 4,987 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

மேலும் இவ்வருடம்க.பொ.த பரீட்சைக்கு 717,008 மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.