வேட்பாளர்களின் கட்டுப்பணங்களை அரசுடமையாக்குவதற்கு தீர்மானம்!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய 33 வேட்பாளர்களின் கட்டுப்பணங்களை அரசுடமையாக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


இதேநேரம், ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியபோது, வேட்புமனுவைத் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் ஆறு பேரின் கட்டுப்பணத்தையும் அரசுடமையாக்குவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவுசெய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக சுயாதீன வேட்பாளர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாவும், அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்தினர்.

இந்த நிலையில், அவர்களின் கட்டுப்பணத்தை அரசுடமையாக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.