வீடுவீடாக இராணுவம் சோதனை!!

வவுனியாவில் இராணுவம் வீடுவீடாகவும் வீதிகளில் சோதனைச்சாவடிகளை அமைத்தும் தீவிர சோதனை.


பூந்தோட்டம் மதீனா நகரில் இராணுவத்தினரால் வீடு வீடாக சோதனை நடவடிக்கை ஒன்று மேற்க்கொள்ளப் பட்டுள்ளது.

நேற்று மற்றும் நேற்று முன் தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக இன்றும் மக்கள் அச்சமடைந்து காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய தினமும் புகையிரத நிலையம்.பேரூந்து தரிப்பிடம் நகர்ப் பகுதியில் இராணுவத்தினரும் ,அதிரடிப்படையினரும் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென ஏற்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கையால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சநிலை பரவிவருவது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.