மின்சாரம் தாக்கியதில் பல்கலைக்கழக மாணவர் பரிதாபமாக பலி!!

கிளிநொச்சி சிவநகர் பகுதியில் மின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவத்தில் யாழ் வவுனியா வளாக பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கும் 22 வயதான விக்னராசா சாரங்கன் எனும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிவநகர் பகுதியில் அமைந்துள்ள அவர்களுக்கு சொந்தமான அரிசி ஆலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரிசி ஆலை உள்ள பகுதியில் வெள்ள நீர் தேங்கியிருந்த நிலையில், அதனை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.