பொன்.சிவகுமாரனின், மாமனிதர்.ரவிராஜ் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் சிவாஜிலிங்கம் பிரசாரங்கள் யாழில்!

தியாகி பொன் சிவகுமாரனின் யாழ். உரும்பிராயில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்திய பின்னர்,



தொடர்ந்து சாவகச்சேரி நகரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் #மாமனிதர்_ரவிராஜ் நினைவுத் தூபிக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது தேர்தல் விஞ்ஞானத்தை திருகோணமலை பிரகடனமாக நேற்று திருகோணமலையில் வைத்து வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து சாவகச்சேரியில் தனது முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தையும் நடத்தினார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.