சுயேட்சையாக களமிறங்கும் ரஞ்சன் ராமநாயக்க!!

அடுத்த பொதுத் தேர்தலில் தனக்கு வேட்புமனு வழங்காவிட்டால் சுயேட்சையாக போட்டியிடபோவதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.


அத்துடன் பொதுத் தேர்தலில் வெற்றியடைய முடியவில்லையென்றால் சினிமாவிற்கே திரும்பி சென்று விடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.தே.கட்சி எனக்கு வேட்பு மனுக்களை வழங்காது என எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தான் என்ன தவறு செய்தேன்? என்றும், கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் தான் செய்த தவறு, சில துறவிகளை அவமதித்தேன் என்றும், எனினும் எல்லா மரியாதைக்குரிய மகா சங்கங்களுக்கும் தான் இதைச் சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை தான் வேட்பாளராக நியமிக்கப்படவில்லையென்றால், கட்சிமாற மாட்டேன் என்ரும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கம்பஹா,கொழும்பு அல்லது எங்காவது வாக்குகளை மக்கள் கொடுத்தால், நாடாளுமன்றத்திற்கு செல்வேன் என்றும், இல்லையெனில் வீட்டிற்குச் சென்று சினிமாவில் நடிப்பேன் எனவும் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.