பொதுத் தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பை விடுத்தார் மஹிந்த!

எதிர்வரும் மார்ச் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதன்படி மார்ச் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் 25, 27 அல்லது 28 ஆம் திகதிகளில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற அமர்வினை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார்.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து அதன் பின்னர் ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுப்பார் என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.