பௌத்த மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வு!!

அகில இலங்கை பௌத்த மத பாடசாலை (தாம் பாசல) மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சியிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது.


புத்தசாசன கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு, பௌத்தமத அலுவல்கள் திணைக்களம், வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா பரக்கும் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு, வெற்றியீட்டிய மாணவர்களிற்கு பதக்கங்களும் பரிசில்களும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை பூராவும் உள்ள 600க்கு மேற்பட்ட பௌத்த மாணவர்களிற்கு பரிசில்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான எஸ்பி.திஸாநாயக்க, எஸ்.எம்.சந்திரசேன மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், மாவட்டங்களை சேர்ந்த அரசாங்க அதிபர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.