டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு யாழில் ஆர்ப்பாட்டம்!!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒரு தரப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க இணைப்பாளர் தாக்கப்பட்டது மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தொடர்பிருப்பதாக தெரிவித்து, அவரை கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி தாம் போராட்டத்தில் ஈடுபடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் பதாகைகளை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிலர் பறிக்க முற்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் உறவுகள் ஈடுபட்டிருந்த வேளை அதிக சத்தத்துடன் அலுவலகத்தினுள் இருந்து பாடல்களை ஒலிக்க விட்டு, ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி.யினர் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.