யாழ் நெல்லியடியில் லஞ்சம் கேட்கும் போக்குவரத்து பொலிஸார்!!

யாழ்ப்பாணம் நெல்லியடி நகரப்பகுதியில் கடமையில் உள்ள போக்குவரத்து போலீசார் சிறிய குற்றங்களுக்கும் பெருந்தொகை பணத்தை லஞ்சமாக வாங்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் .


லஞ்சம் பெறுவது மட்டுமல்லாமல் வாகனத்தில் வருவோர்கள் வயது முதிர்ந்தவர்கள் என்றும் பாராமல் அவர்கள் மேல் கைவைத்த சம்பவங்களும் நிகழ்கின்றதாகவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் நேற்றையதினம் நெல்லியடி நகர பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் நின்ற போக்குவரத்து போலீசார் மூன்று இளைஞர்களை மோட்டார் சைக்கிளுடன் பிடித்து வழக்கு எழுதுபோவதாக பாசாங்கு செய்து லஞ்சம் பெற்றுள்ளனர்.

அத்துடன் தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கையில் போக்குவரத்துப் பொலிசார் பெரும் தொகை லஞ்சத்தை பெறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மலசல கூட பகுதிக்கு வாகன சாரதிகளை செல்லுமாறு கூறி அங்கு வைத்து பொலிஸார் லஞ்சத்தை பெற்றுக் கொள்வதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் வட மாகாண பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பாரா எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.