புதிய அறிவிப்பு வெளியிட்டார் கிழக்கு ஆளுநர்!! .

பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆளுநர் என்ற வகையில் என்னோடு கலந்துரையாடுவதை நான் பெரிதும் விரும்புகிறேன்.


இதனால் மாவட்டத்தின் நிலைமையை நான் தெளிவாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் . அதனை ஆரம்பித்து வைத்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசனுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என கிழக்கு ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் கிழக்கு ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அது தொடர்பாக ஆளுநரின் கருத்தை ஊடகவியலாளரொருவர் அறிய முற்பட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மாவட்டம் என்னென்ன துறைகளில் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்பதனையும், என்ன குறைபாடுகள் நிலவுகின்றன என்பதனையும் அறிந்து வைத்திருப்பவர்கள்.

அவர்கள் என்னோடு கலந்துரையாடுவது மிகவும் பிரயோசனம் மிக்கது என்றார்.

ஸ்ரீநேசன் மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை வளங்களைப் பற்றியும் மக்கள் சந்தித்து வருகின்ற இடர்பாடுகள் பற்றியும் தெளிவாக விளக்கியிருந்தார்.

அவர் குறிப்பிட்ட குறைபாடுகளை சீர்செய்வதிலும் அங்குள்ள பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதிலும் நான் அக்கறையோடு செயற்படுவேன் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.