எல்லை மீறி முத்தமிட்ட ரசிகர்: கண்டுகொள்ளாத நடிகை!

எல்லை மீறிய ரசிகர் ஒருவர், பொதுவெளியில் நடிகை சாரா அலி கானின் கையில் முத்தமிட்ட சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவர் சாரா அலிகான். பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலி கானின் மகளான இவர் கேதார்நாத், சிம்பா என இரு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது வேறு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அவரது கையில் முத்தமிடுவதும், அதனை சாரா கண்டுகொள்ளாமல் செல்வதுமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

நேற்று (ஜனவரி 9) அவர் ஜிம்மில் உடற்பயிற்சி முடித்துக் கொண்டு வெளியே வரும் போது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்கக் குவிந்தனர். அங்கு வந்த ரசிகர்களில் ஒருவர் ஆர்வமிகுதியின் காரணமாக எல்லை மீறி நடந்து கொண்டார். அந்த ரசிகர் திடீரென சாரா அலிகானின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தார். இதனைப் பார்த்த அவரது பாதுகாவலர்கள் அந்த ரசிகரை விரைந்து விலக்கியுள்ளனர்.
ஆனால் சாரா அலிகான் இது எதையும் கண்டு கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.