சென்னை- அந்தமான்: ஆழ்கடலில் செல்லும் கண்ணாடி இழைவடம்!
சென்னை-அந்தமான் இடையே ஆழ்கடல் கண்ணாடி இழைவடம் பதிக்கும் பணியை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் துவங்கி வைத்துள்ளார்.
சென்னை கிண்டி நட்சத்திர விடுதியில் இன்று (ஜனவரி 10) நடைபெற்ற விழாவில், சென்னையிலிருந்து அந்தமானுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் எனப்படும் ஆழ்கடல் கண்ணாடி இழைவடம் பதிக்கும் பணியை மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் துவக்கிவைத்தார். இதில் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் துணை நிலை ஆளுநர் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய ரவிசங்கர் பிரசாத் கண்ணாடி இழைவடம் மிகவும் பாதுகாப்பானது என்று கூறி அதன் மாதிரியையும் கண்பித்து விளக்கினார். மேலும், “சென்னையிலிருந்து அந்தமான் வரை சுமார் 2250 கி.மீ தூரத்திற்கு கண்ணாடி இழைவடம் பதிக்கும் பணி நடைபெறும். இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கி.மீ தூரத்திற்கு கண்ணாடி இழைவடம் அமைப்பது இதுவே முதல் முறை. பிஎஸ்என்எல் மூலமாக நடைபெறும் இந்த பணிக்கு ரூ.1224 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் வரும் ஜூன் மாதத்திற்கு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோலவே கொச்சி முதல் லட்சத்தீவுகள் வரை கண்ணாடி இழைவடம் அமைக்கும் பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ” என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்காக சென்னை பட்டினப்பாக்கத்தில் பிஎஸ்என்எல் பீச் மேன்ஹோல் அமைத்து வரும் நிலையில், இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலத்தை நோக்கிய பகுதிகளிலேயே இதுபோன்ற கட்டுமானங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று விதிகள் உள்ள நிலையில், கடல் அலை தொடும் தூரத்தில் கட்டப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சென்னை கிண்டி நட்சத்திர விடுதியில் இன்று (ஜனவரி 10) நடைபெற்ற விழாவில், சென்னையிலிருந்து அந்தமானுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் எனப்படும் ஆழ்கடல் கண்ணாடி இழைவடம் பதிக்கும் பணியை மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் துவக்கிவைத்தார். இதில் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் துணை நிலை ஆளுநர் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய ரவிசங்கர் பிரசாத் கண்ணாடி இழைவடம் மிகவும் பாதுகாப்பானது என்று கூறி அதன் மாதிரியையும் கண்பித்து விளக்கினார். மேலும், “சென்னையிலிருந்து அந்தமான் வரை சுமார் 2250 கி.மீ தூரத்திற்கு கண்ணாடி இழைவடம் பதிக்கும் பணி நடைபெறும். இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கி.மீ தூரத்திற்கு கண்ணாடி இழைவடம் அமைப்பது இதுவே முதல் முறை. பிஎஸ்என்எல் மூலமாக நடைபெறும் இந்த பணிக்கு ரூ.1224 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் வரும் ஜூன் மாதத்திற்கு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோலவே கொச்சி முதல் லட்சத்தீவுகள் வரை கண்ணாடி இழைவடம் அமைக்கும் பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ” என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்காக சென்னை பட்டினப்பாக்கத்தில் பிஎஸ்என்எல் பீச் மேன்ஹோல் அமைத்து வரும் நிலையில், இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலத்தை நோக்கிய பகுதிகளிலேயே இதுபோன்ற கட்டுமானங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று விதிகள் உள்ள நிலையில், கடல் அலை தொடும் தூரத்தில் கட்டப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை