நீண்டகால ஆட்சியாளரான ஓமானின் சுல்தான் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!
அரேபிய உலகின் நீண்டகால ஆட்சியாளரான ஓமானின் சுல்தான் காபூஸ் பின் சையத்தின் மறைவுக்கு இலங்கை இரங்கல் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் இரங்கல் செய்திகளை ஓமானுக்கு அனுப்பியுள்ளனர்.
அவரது மறைவு தங்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் இலங்கை மக்கள் மற்றும் எனது சார்பாக, அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓமான் மக்களுக்கு மனமார்ந்த இரங்கலை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு சுல்தான் காபூஸ் பின் சையத்தின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் கடந்த 50 ஆண்டுகளாக ஓமான் ஒரு முற்போக்கான மற்றும் அமைதியான தேசமாக மாற்றப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அவரது மறைவினால் ஓமானும் உலகமும் ஒரு புத்திசாலித்தனமான மற்றும் அர்ப்பணிப்புள்ள தேசியத் தலைவரை இழந்துவிட்டது என்றும் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான நெருங்கிய உறவை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பை எப்போதும் மதிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது செய்தியில், “நீண்ட ஆட்சிக்காலத்திலும், சுல்தானின் பொறுப்பாளராக ஓமான் இருந்தபோம், அந்த நாடு சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும், எமது இரு நாடுகளும் மிக அதிகமான தொடர்புகளினால் நெருக்கமாகிவிட்டன என்றும் கூறியுள்ளார்.
மேலும் இலங்கை மக்களுக்கும், ஓமான் மக்களுக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் அவர் செய்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஓமானை 5 தசாப்தங்களாக ஆண்டு வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 79 ஆவது வயதில் நேற்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அந்தவகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் இரங்கல் செய்திகளை ஓமானுக்கு அனுப்பியுள்ளனர்.
அவரது மறைவு தங்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் இலங்கை மக்கள் மற்றும் எனது சார்பாக, அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓமான் மக்களுக்கு மனமார்ந்த இரங்கலை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு சுல்தான் காபூஸ் பின் சையத்தின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் கடந்த 50 ஆண்டுகளாக ஓமான் ஒரு முற்போக்கான மற்றும் அமைதியான தேசமாக மாற்றப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அவரது மறைவினால் ஓமானும் உலகமும் ஒரு புத்திசாலித்தனமான மற்றும் அர்ப்பணிப்புள்ள தேசியத் தலைவரை இழந்துவிட்டது என்றும் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான நெருங்கிய உறவை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பை எப்போதும் மதிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது செய்தியில், “நீண்ட ஆட்சிக்காலத்திலும், சுல்தானின் பொறுப்பாளராக ஓமான் இருந்தபோம், அந்த நாடு சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும், எமது இரு நாடுகளும் மிக அதிகமான தொடர்புகளினால் நெருக்கமாகிவிட்டன என்றும் கூறியுள்ளார்.
மேலும் இலங்கை மக்களுக்கும், ஓமான் மக்களுக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் அவர் செய்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஓமானை 5 தசாப்தங்களாக ஆண்டு வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 79 ஆவது வயதில் நேற்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை