வவுனியாவில் சுவாமி விவேகாநந்தரின் பிறந்ததின நிகழ்வு அனுஷ்டிப்பு!

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில், சைவசமயத்திற்கு அரும்பணியாற்றிய சுவாமி விவேகாநந்தரின் 157 வது பிறந்ததின நிகழ்வு வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.


வவுனியா நகரசபையின், உபநகரபிதா சு.குமாரசாமி தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில் அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டு மலரஞ்சலி நிகழ்தப்பட்டதுடன் தமிழ்மணி அகளங்கன் விவேகானந்தர் தொடர்பான நினைவுரை ஒன்றை ஆற்றியிருந்தார்.

நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், நகரபை உறுப்பினர்கள் சமூகசேவைகள் உத்தியோகத்தர், பிரதேசசபை உறுப்பினர், சமூக ஆர்வலர்கள், வர்த்தகதரப்பினர், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வறுமை நிலையில் உள்ள 10 குடும்பங்களிற்கு தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் பொங்கல் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.