மட்டு. மாநகர முதல்வர் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு!!

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அவர்களுக்கும் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக பேசப்பட்டதுடன், மட்டு. நகரில் மழை காலங்களில் பூரண வடிகான் வசதிகள் இல்லாமையால் மக்களின் அசௌகரிய நிலைமை குறித்தும், அதற்கு தீர்வாக வடிகான்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் மாநகர வீதிகள் அபிவிருத்தி தொடர்பாகவும், வேலைவாய்ப்பு ஆளணி வெற்றிடங்களில் புதியவர்களை நியமனம் செய்தல் போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் இச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.