மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த காற்பந்து வெற்றிக்கிண்ணம்!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட 2020ம் ஆண்டுக்கான  மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த காற்பந்து வெற்றிக்கிண்ணத்தை வவுனியாவின் நட்சத்திர அணிகளில் ஒன்றாகிய யுனிபைட் அணி சுவீகரித்துக்கொணடது.

யுனிபைட் மறறும் மருதநிலா அணிகள் மோதிய விறுவிறுப்பான இறுதிப்போட்டியில்  முதற்பாதி ஆட்டத்தில் எந்த அணிகளும் கோலினைப்பெறாமல் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. அடுத்த பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் யுனிபைட் அணியின் முன்கள வீரர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப்பயன்படுத்தி கோலாக்கினார். அதனடிப்படையில் 1:0 என்ற அடிப்படையில் யுனிபைட் அணி வெற்றிபெற்றது.

ஆட்டத்தில் இரண்டாம் இடம்பெற்ற மருதநிலா  அணிவீரர்கள் இணைந்து இரண்டாம் வெற்றிக்கிண்ணத்தையும் பதினைந்தாயிரம் பணப்பரிசையும் பெற்றுக்கொண்டார்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.