சூடான பாத்திரத்துக்குள் குழந்தையின் கையை வைத்த கொடூர பெண்!

தமது பராமரிப்பில் இருந்த 16 மாதக் குழந்தையின் கையை அடுப்பில் இருந்த சூடான பாத்திரத்துக்குள் வைத்து கடுமையான காயம் விளைவித்ததற்காக 30 வயது பணிப்பெண்ணை பொலிஸாரால் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.



புவாங்காக் லிங்கின் புளோக் 992Bல் உள்ள முதலாளியின் வீட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் தொடர்பில் இம்மாதம் 15ஆம் தேதி அந்தப் பணிப்பெண் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அதற்கு முந்தைய நாள் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது.

வீட்டில் நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான 46 வினாடிகளுக்கான காணொளியை, குழந்தையின் தாயான 40 வயது திருவாட்டி ஏமி லோ ஃபேஸ்புக்கில் நேற்று (ஜனவரி 21) பதிவேற்றியதையடுத்து இச்சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியாகின.

குழந்தையின் இடது கையை அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சூடான பானை ஒன்றுக்குள் வைத்து எடுப்பதும் அதை மீண்டும் மீண்டும் செய்வதும் காணொளியில் பதிவாகியிருந்தன. குழந்தை அழுவதைக் காணொளியில் கேட்க முடிந்தது.

இதுவரை 218,000க்கும் அதிகமான தடவைகள் அந்தக் காணொளி பார்க்கப்பட்டுள்ளது. செய்திக்குப் பிறகு அந்தக் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

திருவாட்டி ஏமி லோவுக்கு 8 வயதில் மற்றொரு மகள் இருக்கிறார்.

அந்தக் காணொளிப் பதிவைப் பார்த்தபோது எனது அங்கம் முழுவதும் அதிர்ந்தது என்று ஊடகம் ஒன்றில் திருவாட்டி ஏமி லோ கூறினார்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஒவ்வோர் இரவும் என் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. குழந்தை அச்சப்படுகிறதா அல்லது இன்னும் வலி இருக்கிறதா என்பது தெரியவில்லை,” என்று கணக்காளராகப் பணிபுரியும் திருவாட்டி லோ குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட பணிப்பெண் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கடந்த மாதம் ஏழாம் தேதிதான் அவர் பணியில் சேர்ந்தார் என்றும் திருவாட்டி லோ தெரிவித்துள்ளார்.

சூடான பொருள் இருந்த சட்டியை குழந்தை தவறுதலாக குழந்தை தொட்டுவிட்டது என்று முதலில் கூறிய பணிப்பெண், இவ்வாறு செய்தால் சொந்த ஊருக்குத் திரும்பிவிட முடியும் என்று எண்ணி இந்தச் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதை திருவாட்டி லோ தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியைப் பார்த்த பிறகு பொலிஸாருக்கு தகவல் திருவாட்டி லோ தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றே அபாயகரமான வழிகளில் காயம் விளைவித்ததாக வகைப்படுத்தி இந்தச் சம்பவத்தின் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.