வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவ விநியோகத்தில் மோசடி!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் தவறான முறையில் விநியோகிக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாகவே விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சிலவியாபார நிலையங்களில் மக்களை ஏமாற்றும் வகையில் நடந்துகொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இணையத்தளங்களில் தன்னிச்சையாக விண்ணப்பப்படிவங்களை அவர்கள் தரவிறக்கம் செய்து பொதுமக்களிடம் விநியோகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அவ்வாறு நிரப்பப்படும் குறித்த விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர் பொதுமக்கள் இதனை நம்பி ஏமாறவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களை நாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இணையத்தளங்களில்குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களினாலேயே குறித்த விண்ணப்பப்படிவம் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னரே வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பப்படிவங்கள் வழங்ப்படும் என்றும், எனவே வதந்திகளை நம்பிஏமாறவேண்டாம் எனவும் மக்களிடம் கிளிநொச்சிமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் இதன்போது கேட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.