விழித்தெழுந்து அக்கினிக் குஞ்சாய்...!

அடக்கி விட நினைத்து
ஆதிக்கம் செலுத்துவோர் முன்
அடங்கிட துணியாதே
உரசி விடு தீப்பிழம்பாய்...!

இடித்து பேசி ருசி கண்டவர்கள் முன்
விம்மி விம்மி வெந்திடாதே
வியாதி பிடித்தவரிடம்
விழித்தெழுந்து அக்கினிக் குஞ்சாய்...!

எல்லைகள் வகுத்துக்கொள்
தொல்லைகள் விலக்கி நில்
வஞ்சக வசைகளை
எதிர்த்து நில் பேரிடியாய்....!

நேசக்கரம் நீட்டும் நெஞ்சங்களில்
உருகி உருகி பொழியும் மழையாகு...
பாசம் வேண்டும் பண்புடையோருக்கு
பரிவோடு மாறிடு தாயாய்....!

அன்புக்கும் நீ தான்…
பண்புக்கும் நீ தான்...
ஆளுமைக்கும் நீ தான்…
ஏனென்றால் நீ பெண்..
நீயே சக்தி...

-சங்கரி சிவகணேசன்-
Blogger இயக்குவது.