கொரோனா வைரஸ் - இலங்கைப்பெண் வைத்தியசாலையில்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்க உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், இலங்கைப் பெண்ணொருவர் தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


30 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, அவருக்கு பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போதே, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.

அதன் அடிப்படையில், அவர் தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த யுவதி, அஹுங்கல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் ஊழியர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தினபுரியைச் சேர்ந்த நபர் ஒருவரின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் அனோஜ் ருத்திகோ தெரிவித்துள்ளார்.

மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் குறித்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை ​ஏனைய நோயாளிகள் இருக்குமிடத்திலிருந்து வேறுபடுத்தி வைத்து சிகிச்சையளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது இரத்த மாதிரிகளை கொழும்பில் பரிசோதனைக்குட்படுத்தி அனுப்பிய பின்னரே உறுதியான தீர்மானத்துக்கு வரமுடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.