இளைஞர்கள் அரசுப் பணிக்கு ஆசைப்படக் கூடாது!

இளைஞர்கள் அரசுப் பணிக்கு ஆசைப்படாமல் தொழில்முனைவோர் ஆக முயற்சி செய்ய வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


சட்டமன்றத்தில் இன்று (ஜனவரி 8) கேள்வி நேரத்தின்போது எழுந்து பேசிய காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், “வீராணம் ஏரியில் பல்வேறு வகையான மீன் வகைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “கட்லா, ரோகு, ஜெயந்தி ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் நவீன ரக மீன் வகைகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “இளைஞர்கள் பலரும் அரசுப் பணிக்கு முயன்று வருகின்றனர். அவர்கள் அரசுப் பணிக்கு ஆசைப்படாமல் தொழில்முனைவோர் ஆக முயற்சி செய்ய வேண்டும். மீன் வளர்ப்புத் தொழிலுக்கு அரசு மானியம் வழங்கத் தயாராக உள்ளது. ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்பு செய்தால் 10 மாதத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்” என்றதோடு, “மீன் அதிகம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக், கண் பார்வை கோளாறு, கேன்சர் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் நம்மை அண்டாது” என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பாக திமுக எழுப்பிய கேள்விக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்து வருகிறார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.