கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது- இர்பான் பதான்!

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறப்போவதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.


29 டெஸ்ட் (1105 ரன் மற்றும் 100 விக்கெட்), 120 ஒருநாள் (1544 ரன் மற்றும் 173 விக்கெட்) மற்றும் 24 டி20 (172 ரன் மற்றும் 28 விக்கெட்) போட்டிகளில் விளையாடிவுள்ள இர்பான் பதான், 301 விக்கெட்டுகளை கைப்பற்றியுளார். 2002 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற வங்காளதேசத்துடனான U-19 போட்டியில் 16 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி, சர்வதேச போட்டிகளுள் அதிரடியாக களமிறங்கினார் இர்பான் பதான். தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே உடன் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறந்த ஸ்விங்-பவுலராக திகழ்ந்தார்.

இந்தியாவுக்காக 2012 ஆம் கடைசியாக விளையாடிய இர்பான் பதானுக்கு, அதன்பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. பின்னர், ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த இர்பான் பதானுக்கு, 2017ஆம் ஆண்டு பின்னர், ஐபிஎல் வாய்ப்புகளும் குறைந்தன.

இந்த நிலையில் மும்பையில் நேற்று (ஜனவரி 4) செய்தியாளர்களை சந்தித்த இர்பான் பதான், “அனைவரும் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையை 27 அல்லது 28 ஆவது வயதில் ஆரம்பித்து 35ஆவது வயது வரை விளையாடுவார்கள். ஆனால், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை 27ஆவது வயதிலேயே முடிந்துவிட்டது என்று நினைக்கும் போது சற்று வருத்தமளிக்கிறது. 500-600 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, இன்னும் கூட என்னால் ரன்களை எடுத்திருக்க முடியும். ஆனால், அதற்கான சூழ்நிலை எதுவும் அமையவில்லை", என்று வேதனையாக தெரிவித்தார்.

மேலும், "சாஹா போன்ற வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது போல் எனக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால், காயங்களை கூட பொருட்படுத்தாமல் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கவனம் செலுத்திருப்பேன்” என்று குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.