கத்தோலிக்க தேவாலயங்களில் தைத்திருநாள் பொங்கல் விழா !!

உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் நன்றிப் பெருநாளாம் உழவர் திருநாளை சிறப்பிக்கு விசேட தைத்திருநாள் பண்பாட்டு திருப்பலி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பாரம்பரிய கலாசார முறையில் இன்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்டது.


உழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் வகையில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு மரியாள் பேராலய கத்தோலிக்க திரு அவையிலும் ,இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்திலும் பண்பாட்டு கலாசார திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.



இன்று இடம்பெற்ற திருப்பலியில் நாட்டில் மதங்களிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கு ஆசிவேண்டி விசேட பொங்கல் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.