மஹிந்த – மைத்திரியால் புதிய வரலாறு உருவாக்கம்!
வரவிருக்கும் பொதுத் தேர்தல் இலங்கைக்கு ஒரு வரலாற்றுத் தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் இம்முறை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக்கட்சி இணைந்து உருவாகும் ஒரே கூட்டணியின் கீழ் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியும் மஹிந்த ராஜபக்ஷ குருநாகலை பிரதிநிதித்துவப்படுத்தியும் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.
ஒரே அரசியல் கூட்டணியில் இருந்து இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், பொதுத் தேர்தலில் போட்டியிடுவைத்து என்பது இதுவே முதன்முறை என்பதுடன் இது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கவுள்ளது. எனவே மார்ச் மாத நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏப்ரல் மாதம் அளவில் பொதுத்தேர்தல் இடம்பெறும் எனவும் குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று ஒருவருடம் நிறைவு பெறவுள்ளமையினால் அதனை முன்வைத்தே பிரசார பணிகள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக்கட்சி இணைந்து உருவாகும் ஒரே கூட்டணியின் கீழ் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியும் மஹிந்த ராஜபக்ஷ குருநாகலை பிரதிநிதித்துவப்படுத்தியும் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.
ஒரே அரசியல் கூட்டணியில் இருந்து இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், பொதுத் தேர்தலில் போட்டியிடுவைத்து என்பது இதுவே முதன்முறை என்பதுடன் இது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கவுள்ளது. எனவே மார்ச் மாத நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏப்ரல் மாதம் அளவில் பொதுத்தேர்தல் இடம்பெறும் எனவும் குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று ஒருவருடம் நிறைவு பெறவுள்ளமையினால் அதனை முன்வைத்தே பிரசார பணிகள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo